tamilnadu

img

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி  சென்னையில் 118 விமானங்கள் ரத்து 

சென்னை 
சீனாவிலிருந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் இந்தியாவில் மிதமான வேகத்தில் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால் மத்திய மாநில அரசுகள் தீவிர கணிக்கணிப்பில் இறங்கியுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் ஒரே நாளில் 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை, மலேசியா, குவைத், சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் 29 விமானங்களும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 29 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து பெங்களூரு, தில்லி, மும்பை, கொல்கத்தா, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 30 விமானங்களும், உள்நாட்டு முக்கிய  நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாகச் சென்னை விமானநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

;