tamilnadu

img

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...

சென்னை 
மாநிலத்தில் கொரோனா பரவல் வேகம் ஜெட் வேகத்தில் உள்ளதால் தினமும் அறிகுறி தொடர்பான மாதிரிகள் அதிகம் வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்துள்ளன. இதில் 65,062  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை - 30,20,714

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை - 29,10,468

;