tamilnadu

img

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விடத் தலைநகரான சென்னை கொரோனாவால் கடும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. தினமும் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் கலக்கத்தில் உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாகச் சென்னையில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 4 பெரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் என மொத்தம் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 768 ஆக உள்ளது. இன்று மட்டும் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 82 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 1,210 ஆக உள்ளது.    
 

;