tamilnadu

img

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த 21-ஆம் தேதி ஆளுநரின் முகவரியைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்துள்ளது. சரவண பிரசாத் என்ற பெயருடனும், போலியான அனுப்புநர் முகவரியுடனும் வந்த அந்தக் கடிதத்தில் ஆளுநர் மாளிகையை தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை சுட்டு விடுவதாகவும், ஆளுநர் குறித்து தரக்குறைவான வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களை கொன்றுவிடுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கிண்டி காவல் துறையினர், கொலைமிரட்டல், அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

;