tamilnadu

img

கோவையில் விடுமுறை அளிக்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடு - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை மீறி காளப்பட்டி, திருமலையாம்பாளையம், பொள்ளாச்சி, பீளமேடு பகுதிகளில் செயல்படும் தனியார் கல்லூரிகள் விடுமுறை அளிக்காமல் வழக்கம் போல் இயங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி செயல்பட தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

;