tamilnadu

img

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை, ஏப். 19-பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 95.01, உதகையில் 84.29சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்ச்சியடைந்துள்ளனர்.பன்னிரெண்டாம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியானது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 95.01சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாநகராட்சி பள்ளிகளில் 92.41 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட குறைவு என்ற போதிலும், மாநில அளவில் 8வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு கோவை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.48 சதவிகிதமாக இருந்தது. இந்தாண்டுமாணவர்கள் 93.69 சதவிகிதமும், மாணவிகள் 96.04 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 39 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் கிணத்துக்கிடவு வடசித்தூர் அரசு பள்ளி உள்ளிட்ட 17 அரசு பள்ளிகளும் அடங்கும். கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 107 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 100 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கோவை மத்திய சிறையில் +2 தேர்வு எழுதிய 9 கைதிகளில் 8 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாநகராட்சியில் உள்ள 16 மாநகராட்சி மேல்நிலைபள்ளிகளில் 92.41 சதவிகிதம் தேர்ச்சியாகி உள்ளது. கடந்த ஆண்டு 87.31 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்தாண்டு 5.09 சதவிகிதம் கூடுதல் தேர்ச்சியை மாநகராட்சி பள்ளிகள் பெற்றுள்ளது. அதில், மாணவர்கள் 83.54 சதவிகிதமும், மாணவிகள் 96.37 சதவிகிதமும் என மொத்தம் 92.41 சதவிகிதம் தேர்ச்சி விகிதமாக உள்ளது. நீலகிரிநீலகிரி மாவட்டத்தில் 74 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 3284 மாணவர்களும், 4057 மாணவிகளும் என மொத்தம் 7341 பேர் தேர்வு எழுதினர். இதில் 3813 மாணவிகள் மற்றும் 2858 மாணவர்கள்தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் அரசு பள்ளிகளில் பயின்ற 2858 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 2409பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.29 ஆகும். 20 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.


நீலகிரி


நீலகிரி மாவட்டத்தில் 74 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 3284 மாணவர்களும், 4057 மாணவிகளும் என மொத்தம் 7341 பேர் தேர்வு எழுதினர். இதில் 3813 மாணவிகள் மற்றும் 2858 மாணவர்கள்தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் அரசு பள்ளிகளில் பயின்ற 2858 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 2409பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.29 ஆகும். 20 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

;