tamilnadu

img

வால்பாறை சுற்றுலா விடுதிக்கு சீல் வைப்பு 

 வால்பாறை, செப். 19- வால்பாறையிலுள்ள வுட் பிரியர் எஸ்டேட் நிறு வனத்திற்கு சொந்தமான உரிமை பெறாமல் இயங்கிய தனியார் கட்டிடத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால் பாறை வுட் பிரியர் என்ற தனியார் எஸ்டேட் நிறு வனத்திற்கு சொந்தமாக மோனிகா என்ற பெயரில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி இயங்கி வந்துள்ளது .  இந்நிலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் இரா.ரவிக்குமார் தலைமையில் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . இந்த ஆய்வின்போது அனுமதி பெறாத மோனிகா சுற்றுலா விடுதி செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்கட்டிடத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

;