tamilnadu

img

சர்க்கரை அட்டையை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை,நவ.26- சர்க்கரை அட்டையை  அரிசி அட்டை களாக மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பச்சை குடும்ப அட்டை களுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளை ரேசன் அட்டைகளுக்கு சர்க்கரை  உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விநி யோகிக்கப்பட்டாலும் அரிசி வழங்கப்படுவ தில்லை. இதனால் வெள்ளை நிற குடும்ப அட்டைதாரர்கள் தங்களையும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான பச்சை நிற குடும்ப அட்டைதாரர்களாக மாற்ற வேண்  டும் என்று தமிழக அரசை கோரி வந்தனர்.

இதை அடுத்து சர்க்கரை அட்டையை, தகுதிக்கு ஏற்ப அரிசி உள்ளிட்ட அனைத்து  பொருட்களும் கிடைக்கும் வகையிலானதாக மாற அனுமதித்து கடந்த வாரம் தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான  விண்ணப்பங்களை  குடும்ப அட்டை நகலு டன் இணைத்து, www.tnpds.gov.in என்ற இணைய தள முகவரியில் நவ.26 ஆம்  தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், அதை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக  அரசு அனுமதித்துள்ளது. வட்ட வழங்கல்  அலுவலர்கள், உதவி ஆணையர்களிடம் நேரடியாகவும் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;