tamilnadu

கோழிப்பண்னை அமைக்க போலி ஆவணங்கள் வங்கியில் ரூ.33 கோடி மோசடி - 4 பேர் கைது

கோவை, பிப். 1- போலி ஆவணங்கள் தயாரித்து கோழிப் பண்ணை அமைக்க வங்கியில் கடன் வாங்கி  ரூ.33 கோடி மோசடி செய்யப்பட்டதாக வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கோவை யில் போலீசார் கைது செய்தனர்.  கோவை - திருச்சி சாலையில் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் லட்சுமி பிரகாஷ்(45) என்பவர் பொது மேலா ளராக உள்ளார். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதில் வங்கியின் முன்னாள் மேலாளர் தூத்துக்குடி மாவட்டம் திருத்தண்டு நல் லூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(55) உட் பட 4 பேர் வங்கியில் ரூ.33 கோடி மோசடி யில் ஈடுபட்டது, கடந்த 2018 -19 ஆம் ஆண்டு களில் வங்கியில் நடந்த கணக்கு தணிக்கை யின்போது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.  இதன்பேரில் மாநகர காவல் உதவி ஆணையர் சௌந்தர்ராஜன் மேற்பார்வை யில் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கோவை ஒண்டிப் புதூரைச் சேர்ந்த இடைத்தரகர் மகேஷ் (41), கட்டுமான தொழில் செய்துவரும் சூலூர் பாண்டியன் (44), கோழிப்பண்ணை நடத்தி வரும் செலக்கரிச்சலைச் சேர்ந்த கோமதி  (42) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சூலூர், பல்லடம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணை அமைக்க இருப்பதாக கூறி கோவை - திருச்சி சாலையில் உள்ள வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.  அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டி பல மடங்கு கடன் கொடுத்து உள்ளார். மேலும் இல்லாத நிலத்துக்கும் போலி ஆவணங்கள் தயாரித்து கடன் கொடுத்துள்ளார். அந்த வகையில் 4 பேரும் ரூ.33 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் முக்கிய நபராக செயல் பட்டுள்ளார். அதன்பேரில் ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சிவசுப் பிரமணியம், மகேஷ், பாண்டியன், கோமதி ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

;