tamilnadu

img

234 பேருடன் 5 மாதங்களுக்கு முன்பு சென்ற படகு காணாமல் போனதால் உறவினர்கள் அச்சம்

கொச்சி:
கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள முனம்பத்திலிருந்து 234 பேருடன் 5 மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட மீன்பிடி படகு காணாமல் போனதால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து நாடுகளுக்கு சென்றிருக்க கூடும் என கருதப்படுவதால் அவர்களை குறித்த தகவல்களை அந்நாடுகளிலிருந்து பெற்றுத்தர உதவுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அளவுக்கு வறுமை வாட்டியதால் தங்களது பிள்ளைகள் இந்த சதிவலையில் சிக்கியதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஜனவரி 12 ஆம் தேதிஇவர்கள் வெளிநாடு செல்ல தலா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளனர். அதன்படி அனைவரையும் மீன்பிடி படகில் ஏற்றி முனம்பத்திலிருந்து அனுப்பியதாக 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளான ஸ்ரீகாந்த், செல்வம் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. படகில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை புகார் அளித்தும் பதில்இல்லாத நிலையில் உறவினர்கள் தில்லியில் முகாமிட்டு உதவி கோரி வருகிறார்கள்.

;