tamilnadu

img

நான் ஏலியன்; 200 ஆண்டு உடலை இயக்கப் போகிறேன்...

பெங்களூரு:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், ஆற்றல்-நிறைச் சமன்பாடு மாறிலி (E = Mc2) விதியையே, அதாவது,குறைந்த அளவு நிறையைக் கூட, மிகமிக அதிகளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதையே தவறு என்று கூறி, உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர், சாமியார் நித்தியானந்தா. அத்துடன் நிற்காமல், விலங்குகளையும் பேச வைக்கும் தனி சாப்ட்வேர் உருவாக்கி இருப்பதாக கூறிய அவர், குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்டவைகளை இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களைப் போல பேச வைக்கப் போவதாகவும்; இதுகுறித்த பரிசோதனைகள் ஏற்கெனவே நடத்தப்பட்டு விட்டதாகவும், விரைவிலேயே அனைத்து விலங்குகளும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசப் போகின்றன என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில்தான், புதிதாக தன்னை ஒரு ‘ஏலியன்’ என்றும், தனது உடலை சுமார் 200 ஆண்டுகள் இயக்கப் போவதாகவும் கூறி, கிச்சுக் கிச்சு மூட்டியுள்ளார்.“இந்து மதத்தில் சைவத்தில் வேத ஆகமாஸ்களில் அனைத்து விதமான அறிவியலும் நிறைந்து இருக்கிறது; சனாதன இந்து தர்மம்அறிவியலையும் கொண்டுள்ளது. இந்துக் கோயில்களில் காணப்படும் டவர்கள் (கோபுரம்) வை-பை போன்று செயல்பட்டு வயர்லெஸ் எலக்ட்ரிக் சிட்டியாக செயல்பட்டு வருகின்றன. அதாவது, இந்து கோயில்கள், பேட்டரி, மெர்க்குரி, என்லைட் பயோ எனர்ஜி, டிரான்ஸ் மீட்டர்களால் செயல்பட்டு, குண்டலி யோக சக்தியை சக்தியை உற்பத்தி செய்கின்றன” என்று ஆராய்ச்சிகளை அள்ளி வீசியுள்ளார்.“பொதுவாக ஏலியன்கள் 1260 ஆண்டுகள் வாழ முடியும். அந்த வகையில் நான் சுமார் 200 ஆண்டுகள் வாழப்போகின்றேன். ஏனென்றால் நானும் ஏலியன்தான். எனது உடலின் டிஎன்ஏ-விலும் இது காணப்படுகின்றது” என்று திகிலூட்டியுள்ள நித்தியானந்தா, “லட்சக்கணக்கான சன்னியாசிகளுக்கும் என்னால் ஏலியன் வாழ்க்கையை அளிக்க முடியும்” டிராகுலா பாணியில் மிரட்டிள்ளார்.

;