tamilnadu

img

கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டது மணிப்பூர்

இம்பால்: 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 32 மாநிலங்கள் இலக்காகி உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில பகுதிகளில் திங்கள் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மிக குறைந்த அளவாக, மணிப்பூரில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மற்றொருவருக்கு கண்காணிப்பு தொடர்ந்தது.

இந்நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரன்சிங், தனது டுவிட்டர் பதிவில், "கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிகிச்சை பெற்ற இரண்டு நோயாளிகளும் முழு அளவில் மீண்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. மணிப்பூரில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மக்கள் ஒத்துழைப்பு, மருத்துவப் பணியாளர் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் இது சாத்தியப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
 

;