tamilnadu

img

அத்தியாவசிய நிறுவனங்களின் அனுமதி சீட்டு: அவகாசம் நீட்டிப்பு

சென்னை, மே 5- சென்னையில் கொரோனா பரவலை  தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கடைகள், தொழில்  நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. மே 4 ஆம் தேதி  முதல் ஒரு சில கடைகள்,  ஓட்டல்கள் திறக்க அனுமதி கொடுக்கப் பட்டு, சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்  கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தி நிறுவ னங்கள், மருந்து நிறுவனங்கள், வங்கி கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான வர்களை கவனித்துக் கொள்பவர்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் போன்ற வற்றிற்கு ஏற்கனவே ஏப்ரல் 14 ஆம் தேதி யில் இருந்து மே 3 ஆம் தேதி வரை அனு மதி சீட்டுகளில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த அனுமதி காலம் வருகிற  17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவ தாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 

;