tamilnadu

img

ஸ்பெயினில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா...  ஒரே நாளில் 1,300 பேருக்கு பாதிப்பு... 

மாட்ரிட் 
உலகில் கொரோனா வைரஸ் எழுச்சி பெற்ற காலத்தில் அதிக சேதாரத்தை சந்தித்த ஐரோப்பா நாடான ஸ்பெயினில் மே மூன்றாம் வாரத்தில் கொரோனா பரவல் மந்தமாகியது. பச்சை மண்டலம் பெறவில்லை என்றாலும் தினசரி பாதிப்பு 200-300க்குள் இருந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் வழக்கம் போல இயல்பு நிலைக்கு திரும்பி தங்களது வேலையை தொடங்கினர். 

இந்நிலையில் ஜூலை 2-ஆம் வாரத்திலிருந்து கொரோனா வைரஸ் தனது 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 1,361 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3.05 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்தவர்களின் விபரத்தை அந்நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. ஸ்பெயின் மட்டுமின்றி பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தனது 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது.  

;