states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கேரளாவின் பல்வேறு தொகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். வடகரா தொகுதியில் போட்டியிடும் தோழர் கே.கே.சைலஜா அவர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டம் முதல் தொடர் கூட்டங்களில் மக்களின் எழுச்சியை, உற்சாகத்தை காண முடிகிறது. கோழிக்கோடு தொகுதியில் போட்டியிடும் எளமரம் கரீம் அவர்கள் மக்களவைக்கு நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கையை மக்கள் கூட்டம் விதைக்கிறது. பில்கிஸ் பானுவிற்காக நடத்திய மாபெரும் நீதிப் போராட்டம் முதல் அரசியலமைப்புச் சட்டபிரிவு 370 ரத்து செய்யப்பட்டது; ஜம்மு- காஷ்மீரில் அந்தஸ்து பறிக்கப்பட்டது; குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு எதிரான போராட்டம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியின் எழுச்சிமிகு  போராட்டங்கள், கேரள தேர்தல் பிரச்சாரக் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளன. உற்சாகமும், நம்பிக்கையும் பொங்கி வருகிறது கேரளத்தில்.

;