states

img

ஆற்றிங்கல் தொகுதி செயலாளர் உட்பட பாஜக நிர்வாகிகள் 36 பேர் சிபிஎம்மில் இணைந்தனர்

ஆற்றிங்கல், மார்ச் 27- கேரளத்தின் ஆற்றிங்கல் தொகுதி செயலாளர் உட்பட 36 பேர் பாஜகவில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். பாஜக தொகுதி பொறுப்பாளர்கள், யுவமோர்ச்சா தொகுதி பொறுப்பாளர்கள், பூத் தலைவர்கள், பூத் கமிட்டி  நிர்வாகிகள் மற்றும் வக்கம் பஞ்சாயத்தை சேர்ந்த 10 முக்கிய  தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியில்  இணைந்தனர். ஓபிசி மோர்ச்சா ஆற்றிங்கல் தொகுதி தலைவர் தங்கராஜ், பாஜக ஆற்றிங்கல் தொகுதி துணைத் தலைவர்  திலீப் டி, மகிளா மோர்ச்சா தலைவர் பிரியா, பல்வேறு பூத் தலைவர்களான அஜி, குமார், கனகராஜ், விஜயன் மற்றும்  பூத் செயலாளர்கள் சுனில், சிவானந்தன், பாபு ஆகியோர் சிபிஎம்மில் இணைந்தனர். ஆற்றிங்கல் நகராட்சியின் பாஜக கவுன்சிலர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் (டிசிசி) பொதுச் செயலாளர் ஷோர்னூர் விஜயன் சிபிஎம்-இல் இணைந்தார்.

;