india

img

குஜராத்தில் 100 கிலோ ஹெராயின் கடத்தி வந்த 9 பேர் கைது

குஜராத்தில், 100 கிலோ ஹெராயினை படகை கடத்தி வந்த ஈரான் நாட்டினர் 9 பேரை பிடித்து இந்திய கடலோர காவல் படை கைது செய்தது.

குஜராத் மாநிலத்துக்குட்பட்ட கடல் பகுதியில் வந்த ஒரு படகை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்காக கடலோர காவல் படையினரின் ரோந்துப் படகு விரைந்து சென்றது.

அப்போது, அவ்வழியே வந்த படகில் வந்தவர்கள் காவல்படையை கண்ட உடன் தங்களது படகை திடீரென்று தீயிட்டு கொளுத்தினர். ஈரான் நாட்டை சேர்ந்த அந்த படகை கடலோர காவல் படையினர் நெருங்குவதற்குள் பாதி எரிந்த நிலையில் அந்த படகு நீரில் மூழ்க தொடங்கியது.

படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் அதில் வந்த 9 பேரை கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த சுமார் 100 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


;