india

img

நாட்டின்  எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார்....  ராகுல் காந்தி சாடல்...

புதுதில்லி:
நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கடுமையாகச் சாடியுள்ளார். 

‘டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர்மோடி காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடி னார். அப்போது பிரதமர் பேசுகையில், “இந்தியாவின் திறன்கள், கலை, கலாச்சாரம், சமூகத்தை உலகம் புரிந்துகொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார்.அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என்றுசாடியுள்ளார்

;