india

img

கொரோனா பரவல்... நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் : சிவசேனா.....

புதுதில்லி:
கொரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் வார இறுதி ஊரடங்கையும், பல கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 15 ஆம் தேதி 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அது தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:

கொரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மகாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் பற்றி விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;