games

img

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு கொரோனா தொற்று....    

லண்டன் 
5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. வரும் 20-ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கு தயாராக உள்ள இந்திய அணியில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து - ஜெர்மனி ஆட்டத்தை ரசிக்க சென்றதன் மூலம் கொரோனா பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே போல மற்றொரு விக்கெட் கீப்பரான சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் பணிக்கு குடைச்சல் ஏற்படும் என்பதால் சஹாவை தனிமையில் வைத்துள்ளனர்.    

;