education

img

தருமபுரி அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை

தமிழகத்தின் வடக்கு பகுதி மாவட்டமான தருமபுரியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள்: தருமபுரி டவுன் தொடக்கப்பள்ளி (பிற்படுத்தப்பட்டோர் -முஸ்லீம் தவிர), அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளி (பொதுப்போட்டி)

சம்பளம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை 

தகுதிகள்: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேணடும். பழங்குடியினராக இருந்தால் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கியமாக விண்ணப்பதாரர்கள், பணி நியமன இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு தொலைவுக்குள் குடியிருக்க வேண்டும்.

ஆர்வமும், மேற்கண்ட தகுதியும் உள்ளவர்கள் dharmapuri.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது பற்றிய முழுமையான விபரங்களுக்குத் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். 

;