districts

img

அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் நீர் மோர் பந்தல் திறப்பு

அறந்தாங்கி, ஏப்.30-  புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் கொ ரோனா காலக் கட்டத்தில், அறந்தாங்கி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணி களை செய்து மக்களின் நன் மதிப்பை பெற்ற சங்கமாக விளங்கியது அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப். தற்போது இந்த கிளப், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தவிக்கும் பொது மக்களின் நலன் கருதி, அறந்தாங்கி-பேராவூரணி சாலையில், சந்தை முதல் கேட் எதிரே ஜி.எஸ்.அருண் ஸ்டோர் முன்பு நீர் மோர் பந்தலை செவ்வாயன்று திறந்தன. ரோட்டரி தலைவர் முரு கேசன் தலைமை வகித்தார்.  அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் பவுண்டேசன் சேர்மன் பொன்.முத்துராமலிங்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத் தார். ரோட்டரி மாவட்டம் 3000 -ன் இணைச் செயலாளர் ஆடிட்டர் தங்கதுரை, செய லாளர் அன்னை ப்ளக்ஸ் சுப்பு, முன்னாள் தலைவர் புவனா செந்தில்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

;