districts

img

ஜோதிமணிக்கு ஆதரவாக சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

கரூர், ஏப்.17 - இந்தியா கூட்டணி சார்பில் காங்கி ரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி கரூர்  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடு கிறார். இவர் கரூர் தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம், புகளூர், அரவக் குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதனன்று தீவிர  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து, அவரை ஆரத்தழுவி மலர் தூவி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.   குறிப்பாக, கரூர் ஒன்றியம் வேலா யுதம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் தலைமையில் மாபெரும் வர வேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடராஜன், பூரணம், டிஎன்பிஎல் தொழிற்சங்க தலைவர்கள் அரவிந்த், வேலு, கிருபாகரன் புகளூர் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி மற்றும் மாதர் சங்கத்தின் சார்பாக சுமதி, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாநகரக் குழு  வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதர வாக, கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில் ராயனூர் பகுதியில் வீடு வீடாக  சென்று மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, கைச் சின்னத்திற்கு வாக்கு கள் சேகரிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.பி.ஜீவானந்தம், ஆர்.ஹோச்சுமின், கரூர் மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி, ராயனூர் கிளைச்  செயலாளர் சக்திவேல், உறுப்பினர்கள் கணேசன், பிரசாத், ஆறுமுகம், மருத முத்து, காந்திகிராமம் கிளைச் செயலா ளர் சி.செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாகனப் பேரணி கரூர் காந்திகிராமத்திலிருந்து இரு சக்கர வாகன மாபெரும் பேரணி நடை பெற்றது. பின்பு, கரூர் பேருந்து நிலை யம் அருகில் உள்ள தேர்தல் பணி மனை முன்பு தேர்தல் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.  திமுக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் திருச்சி சிவா, கரூர்  நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பா ளர் எம்.எம் அப்துல்லா எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவ காமசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, கரூர் மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி, திமுக மாநக ரச் செயலாளர்கள் கனகராஜ், சுப்பிர மணியன், ராஜா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர். மணப்பாறை வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்.15, 16 தேதிகளில் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மணப்பாறை பேருந்து நிலையம், விடத்திலாம்பட்டி, செவலூர் பிரிவு ரோடு, பொத்தமேட்டுப்பட்டி, மணவை காமராஜர் சிலை, பாரதியார் நகர், வடக்கிப்பட்டி, சோளப்பட்டி, சீகம்பட்டி, முச்சந்தி, உசிலை ஊரணி, புதிய காலனி,  உசிலம்பட்டி, ஆனாம்பட்டி, சாம்பட்டி,  திருமலையாம்பட்டி, கல்பாளையத் தான்பட்டி, பண்ணாங்கொம்பு, புத்தா நத்தம், மானாங்குன்றம், காரைக் குளம், காவல்காரன் பட்டி, பண்ணப் பட்டி மற்றும் கரட்டுப்பட்டியில் பிரச்சா ரம் நடைபெற்றது.  பிரச்சாரத்தை சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மருங்காபுரி வட்டச் செயலாளர் தியாகராஜன், வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர்  பேசினர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மணப்பாறையில், திமுக தலைமை யில் நடைபெற்ற இருசக்கர வாகன ரோடு ஷோ நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.

;