districts

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கை கழன்று, அதனுடன் சேர்ந்து நடத்துநரும் சாலையில் விழுந்து காய மடைந்தார். இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உள்ளிட்ட 3 பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத் திலிருந்து கே.கே.நகருக்கு செவ்வா யன்று அரசு நகரப் பேருந்து புறப்பட்டது.  அப்போது அந்தப் பேருந்தில், ஏற்க னவே சேதமடைந்த நிலையில் இருந்த  இருக்கையில் எடமலைப்பட்டி புதூ ரைச் சேர்ந்த நடத்துநர் முருகேசன்(54) அமர்ந்திருந்தார். இந்தப் பேருந்து மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பிய போது, சேதமடைந்த இருக்கை முழுவதும் கழன்றதில், பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழி யாக இருக்கையுடன் சேர்ந்து, நடத்துநர்  முருகேசனும் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.  பேருந்து பயணிகள் கூச்சலிட்ட தால், ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை  நிறுத்தி, காயமடைந்த நடத்துநர் முரு கேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், அந்தப் பேருந்தில் இருந்த  பயணிகள், வேறு பேருந்து மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர். சேதம டைந்த பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடை யில், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக்  கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலா ளர் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை  பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் வியாழனன்று போக்கு வரத்து கழக பொது மேலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழு வினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள  சாலையை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலை யில் பள்ளம் உள்ளது. இதில் பள்ளத்தில்  சக்கரம் இறங்கும்போது பேருந்து சரிந் துள்ளது. இந்த சாலையை சீர் செய் வது தொடர்பாக ஆட்சியருக்கு அறிக்கை  சமர்ப்பிக்க உள்ளோம்” என்றனர்.

;