districts

img

கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்க! பொதுமக்கள், சிபிஎம் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.21 - கொலை வழக்கில் தொடர்புடைய வர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொது மக்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக் கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் பகுதி யைச் சேர்ந்தவர், குழந்தைவேலு மகன் கோகி லவாசன் (45). கூலித் தொழிலாளியான இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி, அவரது மகன்களான ஜெயபால், ஜெய ராஜ், ஜெகதீஷ் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது.  இதுகுறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்.15 ஆம் தேதி காலை 6 மணி அளவில் ரெங்கசாமி தரப்பினர் வீடு புகுந்து கோகில வாசனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாய மடைந்த கோகிலவாசன், தஞ்சை மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை  பலனின்றி கோகிலவாசன் சனிக்கிழமை இரவு  உயிரிழந்தார்.  இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் ஜெயபால், ஜெகதீஸ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 4 ஆவது நுழைவுவாசலில், இறந்து போன கோகிலவாசனின் உறவினர்கள் மற்றும்  சிபிஎம் நிர்வாகிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரெங்கசாமி, ஜெயராஜ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய  வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தஞ்சை ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன், இந்திய  மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர்  ஜி.அரவிந்தசாமி, சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் கரிகாலன், புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழ.ஆசைத்தம்பி, புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் லட்சாதிபதி, புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமை யன், கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செய லாளர் பன்னீர்செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல், கணபதிபுரம் கிளை  உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவருடன் தஞ்சாவூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன், காவல் துறை ஆய்வாளர் பிராங்கிளின், கந்தர்வ கோட்டை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

;