districts

img

முறையாக குடிநீர் வழங்குக - சிபிஎம் தலைமையில் முற்றுகை

சேலம், மே. 6 - முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக் கள் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட் சியில் கடந்த 40 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால்  பொதுமக்கள் குடிப்பதற்கே குடிநீர் இல் லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும், எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், மார்க் சிஸ்ட் கட்சியுடன் இணைந்து குடிநீர் வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை  சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப் பினர் ஜி.கவிதா, நங்கவள்ளி ஒன்றி யச் செயலாளர் கே.ராஜாத்தி ஆகி யோர் முன்னின்று போராட்டத்தை வழி நடத்தினர். தகவலறிந்து வந்த போலீ சார் மற்றும் ஊராட்சி நிர்வாகம், பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித் தனர். இதனைத்தொடர்ந்து, அனைவ ரும் கலைந்து சென்றனர்.

;