மாமேதை காரல் மார்க்சின் 206-ஆவது பிறந்த தினம் (மே 5) ஞாயிறன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனொரு பகுதியாக, கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலக வளாகத்திலுள்ள காரல் மார்க்ஸ் உருவச் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாநகரச் செயலாளர் அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், புதுவை மூத்த தோழர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.