சிங்காநல்லூர் டாக்டர் முத்தூஸ் எலும்பு முறிவு மருத்துவமனையில், விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.