img

அம்பேத்கர் வசித்த இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...

மும்பை:
மும்பையில் ‘பாபா சாகேப்’ அம்பேத்கரின் ‘ராஜகிருஹா’ இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மும்பை தாதர் பகுதியில் டாக்டர்அம்பேத்கர் வசித்து வந்த ‘ராஜகிருஹா’ (Rajgruha) இல்லம் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த மாளிகையின்கீழ்தளத்தில் அம்பேத்கர் அருங் காட்சியகம் அமைந்துள்ளது. இதில்அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா ஊடரடங்கையொட்டி அருங்காட்சியம் மூடப் பட்டிருந்ததுஇந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், செவ்வாயன்று திடீரென ராஜகிருஹா-வுக்குள்நுழைந்து வீட்டின் முன்பகுதியில் தாக்குதல் நடத்தி, பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களைச் சூறையாடியுள்ளனர்.இது மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதல் தொடர்பான செய்திஅறிந்ததும், அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் பெருமளவில் ராஜகிருஹா முன்பு கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அரசியல் கட்சித் தலைவர்களும், அம்பேத்கரின் இல்லம் சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்அனில்தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

;