tamilnadu

img

அரசியல் சட்ட உரிமைகளை பாதுகாக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கைவிட வேண்டும்.அரசியல் சட்ட உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்.  நீதிமன்ற அவமதிப்பு குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சேபணை தெரிவிக்கும் இயக்கம் ஆகஸ்ட் 19 வியாழனன்று நடைபெற்றது. மதுரை, கன்னியாகுமரி, பழனி, திருச்செங்கோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி , விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இயக்கங்களில் பலர் கலந்துகொண்டனர்.

;