tamilnadu

img

பயணிகள் மீது அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக நடைமேடைக் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்துவதா? தென்னக இரயில்வேயின் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் எதிர்ப்பு

மதுரை:
ரயில்நிலையத்திற்கு வருபவர்களின்  எண்ணிக்கையை குறைப்பதற்காக நடைமேடை கட்டணத்தை ரூ.50 ஆகஉயர்த்தியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கடிதம்எழுதியுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:கொரோனா வைரஸ் பரவலாக்கத் தைத் தடுக்க பயணிகளுடன் ரயில் நிலையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை  குறைப்பதற்காக  நடைமேடை கட்டணத்தை ரூ.10 லிருந்து 50 ஆக உயர்த்தி சென்னைமற்றும் மதுரைக் கோட்ட மேலா ளர்கள் மார்ச் 17 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.கொரோனா வைரஸ் சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி யது அரசு  மற்றும் அரசு சார்ந்த துறைகளின் கடமை. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதற்கு கட்டண உயர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவது நேர்மையான செயல் அல்ல.

அது மட்டுமல்ல, அந்த விழிப்புணர்வை உருவாக்க இரயில்வே நிர்வாகத்துக்கு இருக்கும் பொறுப்பை கைவிடும் பொறுப்பற்ற செயலும் கூட. உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்டுகிறேன்.“கொரோனா வைரஸ் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி தருவதை நிறுத்துகிறோம். தேவைப் படுபவர்கள் மட்டும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்” என்று சில நாட் களுக்கு முன் இரயில்வே துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அவ்வறிவிப்பினைத் தொடர்ந்து பயணிகளுக்கு கம்பளி தருவது உடனடியாக நிறுத்தப்பட்டது. அதாவது, தூய்மை மற்றும் பாதுகாப்பான பொருட்களை கொடுக்க முடியா மல் பயணிகளுக்கு தாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய பணியை ஒரே நாளில் கைவிடுவீர்கள்; ஆனால் பயணிகளோ கொரோனா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொறுப்புணர்வுக்காக ஐந்து மடங்கு கட்டணத்தை உடனேதரவேண்டும் என்று உத்தரவிடுவீர்களா?

இது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு இக்கட்டண உயர்வை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.பயணிகள் மீது அக்கறை செலுத்து வதற்கான தருணம் இதுபயணிகள் உடன்  பலரை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுங்கள். பயணிகளோடு தேவை யில்லாமல் ரயில் நிலை யத்துக்குள் வருபவர்களை காவலர்கள் மூலம் அறி வுறுத்தி திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். இதுபயணிகள் மீது இரயில்வே நிர்வாகம் தனது அக்கறை யை வெளிப்படுத்த வேண்டிய நேரம். பொது மக்கள் அத்தியாவசியம் அல்லாத பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளன. அப்படி இருக்கும் சூழலில் இப்பொழுது வரை பயணச்சீட்டு ரத்துக்கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். அதுசம்பந்தமாக இரயில்வே ஆலோ சனைக்குழு உறுப்பினர் என்ற முறை யில் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன்.

பயோ மெட்ரிக் முறையைக் கைவிடுக!
அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை கைவிடுமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை மார்ச் 6 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி,ஈரோடு, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இன்றுவரை ஒருங்கிணைந்த ஓட்டுனர் மற்றும் காப்பாளர் வருகைப்பதிவு என்பது பயோமெட்ரிக் முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை விடக்கொடுமை சுவாச பரிசோதனை (Breathlyzer Test)  முறை. இம்முறையால் கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் விமானப் போக்குவரத்து துறையே இப்பரிசோதனையை கைவிட்டுவிட்டது. ஆனால் தென்னக இரயில்வே தனது ஊழியர்களுக்கு இன்றுவரை இப்பரிசோதனையை செய்து கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலாக்கத்தை தடுக்க இரயில்வே துறை தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய மாற்றத்தை செய்து  தனதுஊழியர்களையும், இரயில்நிலை யங்களுக்கு வரும் பொதுமக்களையும் பாதுகாக்க கூடுதல் கவனமும் அக்க றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அரசுத்துறைகளில் நாள்தோறும் மிக அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கையாளும் துறை  இரயில்வே துறை. எனவே மிக அதிக சவால்களை அத்துறை சந்திக்கிறது. அதனை திறம்பட நிறைவேற்றும் ஆற்றலும் அனுபவமும் இரயில்வே துறைக்கு உண்டு.தனிமனிதன், சமூகம், அரசு என மூன்று தரப்பிலும் ஒருங்கிணைந்து செயலாற்றும் முயற்சிக்கு தென்னக இரயில்வே சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;