tamilnadu

img

போடி சுப்பிரமணியன் காலமானார்....

மதுரை:
தீக்கதிர் நாளிதழின் தேனிமாவட்டச் செய்தியாளர் சு.முத்துவின் தந்தை சுப்பிரமணியன் (77) காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றிபுதன்கிழமை இரவு காலமானார். மறைந்த சுப்பிரமணியன் ஆசியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவ ராவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பின ராகவும் செயல்பட்டவர். சுப்பிரமணியனுக்கு லோகமணி என்ற மனைவியும் சு.முத்து, சு.செல்வம், சு.கோபிநாத் ஆகிய மூன்று மகன்கள்உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி போடியிலுள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்க டேசன், தீக்கதிர் மதுரை பொறுப்பாசிரியர் எஸ்.பி.இராஜேந்திரன், செய்தியாசிரியர் ப.முருகன், மேலாளர் ஜோ.ராஜ்மோகன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி, ஜாப் ஒர்க் மேலாளர் பாண்டியராஜன்,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் (டிஜேயு) புருஷோத்தமன்  மற்றும் பல்வேறு மாவட்டங்களின் செய்தியாளர்கள், தாலுகாசெய்தியாளர்கள் ஊடகவியலாளர்கள், தேனி பத்திரிகையாளர்கள், ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;