tamilnadu

img

மதுரை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் பாஜக இளைஞரணி தலைவர்

மதுரை:
மதுரையில் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் கையில் ஏர்கன்னை உயர்த்திக் காட்டியபடி மேடையில் நிற்கும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி மதுரை ஊமச்சிகுளம் கோபாலகிருஷ்ண பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணித் தலைவர் வினோஜுக்கு வீச்சரிவாள், வில் அம்பு என்று நினைவுப் பரிசுவழங்கினர். அப்போது இளைஞரணி மாநில செயலாளரான மதுரைசங்கரபாண்டியின் ஏற்பாட்டின் பேரில் மதுரை மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் வேதகிரி சால்கர் என்பவர் வினோஜின் கையில் ஒரு துப்பாக்கி கொடுத்தார்.  இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மாநில இளைஞரணிச் செயலாளர் சங்கரபாண்டி கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வில் அம்பு, வீச்சரிவாள் என்று வழங்கினார்கள். 

நாங்கள் மதுரை வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக துப்பாக்கியைக் கொடுத்தோம். துப்பாக்கியைப் பார்த்த பின்னர்தான் வினோஜ் விசாரித்தார். அது ஏர்கன். அதன் விலை 1,500 ரூபாய். எங்கள் சிறுபான்மை அணியின் மாவட்ட தலைவர் வேதகிரி சால்கர் மதுரையில் உரிமம் பெற்ற துப்பாக்கி கடை வைத்திருக்கிறார். அதனால்தான் இந்த ஏர்கன் நினைவுப்பரிசாக வழங்கினார் என்று தெரிவித்தார். 

;