tamilnadu

img

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க சு.வெங்கடேசன் எம்.பி.கோரிக்கை

மதுரை, மார்ச் 28- தமிழகம் முழுவதும் உயிர் காக்கும் சேவையை இரவு பகலாக செய்து கொண்டிருக்கும் 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டு மென்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும்  ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் 108 ஆம்புலன்சில் பணியாற்றி வருகிறன்றனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியத்தை 108 சேவையை வழங்கும் நிறுவனத்தின் வழியாகவோ, நேரடியாகவோ இச்சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கென்று தீர்மானிக்கப்ப ட்டுள்ள ஆம்புலன்ஸில் அனைத்துவகையான "கொரோனா கிட்" வழங்கப்பட்டுள்ளது.  மற்ற ஆம்புலன்ஸ்களுக்கும் போதுமான முககவசம் உள்ளிட்ட  பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 33 ஆம்புலன்ஸ்களில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளைக் கையாள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஊழியர்களுக்கு அனைத்துவகை பாதுகாப்பு உபகரணங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்புலன்ஸ்களில் போதுமான அளவு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. மாநிலம் முழுவதும் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;