நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில், குழந்தைகளை வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீ சாரின் மூன்று தனிப்படை குழுக்கள் விரைந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட எட்டு பேரும், சமீபத்தில் சேலம் எஸ்.கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய உதவி செவிலியர் சாந்தியும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மேற்கொண்ட விசாரணையில், இவர் களால் சுமார் 30 குழந்தைகள் வாங்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தைகளை வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்களின் ஒரு சிலரின் முகவரிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் படி குழந்தைகள் விற்பனை குறித்துஅவர்களிடம் விசாரணை நடத்த, சேலம் சிபிசிஐடி போலீசாரின் மூன்று தனிப்படை குழுக்கள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கும், ஈரோடு மற்றும் பவானிக்கும் விரைந்துள்ளனர்.