tamilnadu

img

வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

சென்னை,

வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற தேவாலயத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஞாயிறன்று நடந்த தொடர்குண்டு வெடிப்பில் சிக்கி 290பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  


;