tamilnadu

img

நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா... 

நாகர்கோவில்
தமிழகத்தில் எம்எல்ஏ-க்கள் கொரோனவால் பாதிக்கப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 எம்எல்ஏ-க்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (ஞாயிறு) கன்னியாகுமரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரான  நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கும் இன்று (திங்கள்)  கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சுரேஷ் ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 அமைச்சர்களும் அடங்கும்.

;