tamilnadu

img

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய தூத்துக்குடி... 

தூத்துக்குடி 
தமிழகத்தின் தென்மேற்கு எல்லை மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் இறந்துள்ள நிலையில் மீதமுள்ள 26 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வரை 25 பேர் குணமடைந்து அடுத்தடுத்து வீடு திரும்பினர். மீதமுள்ள ஒரு பெண்ணும் இன்று கொரோனவை வென்று வீடு திரும்பினார். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்ட பட்டியலில் ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்துள்ளது. ஏற்கெனெவே கொரோனா பாதிப்பில்லா மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;