tamilnadu

img

திருவாரூர் மத்தியப் பல்கலை.க்கு  மார்ச் 31 வரை விடுமுறை

திருவாரூர்:
கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி வரைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் மேற் கொண்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாடுமத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும்  பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக துணை வேந்தர்ஏ.பி. தாஸ் தெரிவித்துள்ளார். 

;