tamilnadu

அஞ்சல் வாடிக்கையாளர்கள் இன்று குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி:
இந்திய அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டையில்  28 ஆம் தேதி நடைபெற உள்ளது என அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக நெல்லைஅஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:பாளையங்கோட்டை தலைமைஅஞ்சல் அலுவலக வளாகத்தில்அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம்   28 ஆம் தேதி மாலை4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் பங்கேற்று தங்கள் பகுதி அஞ்சல் பணிகள் குறித்து குறைகள், சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருந்தால் உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;