tamilnadu

img

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஏப்.6-


பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான முன்னோட்டப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தொடங்கி வைத்து பேசினார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் கலியபெருமாள் பேசினர். ஏப்.7 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சட்டமன்றத் தொகுதி அளவிலான 1,248 பேர் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவது, அஞ்சல் வாக்குகளை அளிப்பது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் மண்டல அலுவலர்கள் 24 பேர் கலந்துகொண்டனர். 

;