tamilnadu

வேளாங்கண்ணி பேராலயத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு

சென்னை, ஏப்.22-இலங்கை வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு வருபவர்கள் முழு சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பிரத்யேகக் கருவிகள் மூலம் அவர்களதுஉடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. ஆலயத்தைச் சுற்றி ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.கோடியக்கரை, நாகை, சாமந்தன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 19 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கடலோர பாதுகாப்புக் குழுமம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

;