tamilnadu

img

விளம்பர நோக்கில் மாணவர்களின் பெயர்களை பள்ளிகள் வெளியிட தடை- பள்ளி கல்வித்துறை இயக்ககம்

பிளஸ்2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை வெளியிட பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளிகள் விளம்பர நோக்கில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. 


;