tamilnadu

img

நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் பாதிப்படையாமல் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திடுக... முதல்வர், அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு

சென்னை:
நெல்கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நெல் பாதிப்படைகிறது.நெல் பாதிப்படையாமல் நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.  

முதல்வர், அமைச்சர் ,முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நெல் ஒரு பிரதானமான பயிர். காவிரி டெல்டா மாவட்டங்கள்மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் செயல்படுகிற காரணத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்அனைத்தும் மழையில் நனைந்து விவசாயிகளுக்கும், அரசுக்கும் ஆண்டுதோ றும் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. நனைந்த நெல்மூட்டைகள் அப்படியே அடுக்கப்படுவதால் கெட்டுப்போய் மனிதர் களால் பயன்படுத்த முடியாத அளவிற்குஅரிசி நாற்றமெடுத்து வீணாகிறது. விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்த நெல் இப்படிவீணாவதை எவராலும் நியாயப்படுத்த முடியாது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழை, ஜுன், ஜுலை மாதங்களில் பெய்த மழையால் பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்துநாசமாகிவிட்டதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டது. எனவே இத்தகைய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில்நிரந்தரமான பாதுகாப்பான  கிடங்கு வசதிகளை தேவைக்கேற்ப ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் முழுவதும் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் வழங்கப் படுவதை, உத்தரவாதப்படுத்த வேண்டும். அத்துடன் மழையால் நனைந்து நாசமான நெல் மூட்டை களுக்கு உரிய பணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;