tamilnadu

ஓவிய ஆசிரியர் தேர்வில் வெற்றி: பணி நியமனம் வழங்க உத்தரவு

சென்னை, ஏப்.7-தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் ஓவிய ஆசிரியர் பணிக் கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓவியம் மற்றும் தையல் பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அதில் வெற்றிபெற்ற 80 பேர் தங்களுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பணி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பத்திலும் தமிழ் வழியில் படித்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார்.

;