tamilnadu

img

ஆளுநர் மாளிகை முற்றுகை... கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் கைது

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான்  மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க. வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்களை முன்னேறவிடாமல் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி கைதுசெய்தனர்.இதேபோல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநில ஆளுநர் பாஜக கைப்பாவை போல் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.தமிழகம் போன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன் பாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;