tamilnadu

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை, மே 22-சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.மக்களவை தேர்தலின் போது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறையால் சுமார் 275 பேர் வாக்களிக்க முடியாமல் போனது. இதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கேரிக்கை வைக்கப்பட்டது. புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. போராட்டம் நடத்தினர்.இதற்கிடையே, விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.இதையடுத்து பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையமும் மறுத்து விட்டது. இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, விஷ்ணுராஜ் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக அணுக அறிவுறுத்தினர்.

;