tamilnadu

img

ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி : திமுக கண்டனம்...

சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலினை கொச் சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறி - திண்டாடிக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, எங்கள் தலைவர் தளபதி குறித்துத் தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டி அநாகரிக அரசியல் செய்வதற்குத் தூபம் போடுவதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதிமுகவினரால் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளால் கோயம் புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழகத் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக “ஒட்டியவர்களே” சில இடங்களில் சுவரொட்டிகளைக் கிழித்துள்ளார்கள்.

பல இடங்களில் காவல்துறை நண்பர்கள் கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் கோவையில் உள்ள காவல் துறையினர் மட்டும் அமைச்சர் “எஸ்.பி. வேலுமணியின்” எடுபிடிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.கோவை, குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுவரொட்டிகளை - அ.தி.மு.க.வினரும் கிழிக்காமல் காவல்துறையினரும் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால் -  தொண்டர் களே ஆவேசப்பட்டுப் போராடியிருக்கிறார்கள். அப்படி “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” எங்கள் தலைவர் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்த திமுகவினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. இந்த அபத்தமான நடவடிக்கையை - அராஜகமான நடவடிக் கையை குனியமுத்தூர் காவல் நிலைய அதிகாரி செய்திருக்கிறார்; அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார் என்பது சட்டவிரோதமானது.

தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழகத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பாஜக மிரட்டல்
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தமிழ்நாடு தலைவர் முருகன், “ஸ்டாலின், திருமாவளவன் உள் ளிட்டோர் மன்னிப்பு கேட்கும்வரை வெளியில் நடமாட முடியாது. அவர்கள் மன் னிப்பு கேட்க வேண்டும். தமிழக சகோதரிகள் அவர்களுக்கு பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

;