tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை.... அமைச்சர்

சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே நலத்திட்டப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஈரோடு மாவட்டம் முழுவதும் நலத்திட்டப் பணிகளும் புனரமைப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்புத் தனித்தேர்வர் கள் 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண் ணப்பிக்கலாம். அதில் எத்தனை பேர் விண்ணப் பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிகளைப் போல் அல்ல, தனித் தேர்வர்களின் நிலை வேறு.நீட் தேர்வை ரத்து செய்ய  வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்றார்.

;