tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில்  ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 28) என்பவரிடம்  சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 486 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த கடலூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் (40), இராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரானுல்லா (37), சிந்தா (49) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.46 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 576 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

;